09.02.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருமதி சரண்யா லட்சுமிகுமாரன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரு விக்னேஷ் மிருதங்கமும், திரு ராகவேந்திர பிரசாத் வயலினும், திரு எம். ஸ்ரீராம் கடமும் பக்கவாத்தியங்களாக வாசித்தார்கள். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திரு வி.எஸ். சம்பத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆ. வெங்கடேசன், திரு ஏ.வி. முனியப்பன் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தார்கள்.


