ஜூலை, 2023

30.07.2023 ஞாயிற்றுக்கிழமை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் Deputy Advisor, NITI Aayog திரு ஏ. முரளிதரன் அவர்களின் “கதம்பக் கதைகள்” என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் பேச்சாளரை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைச் செயலாளர் டாக்டர் எம். சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கட், திரு தி. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி. ரங்கநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

DINAMALAR – 29.07.2023