12.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஆண்டாள் திருப்பாவை என்ற தலைப்பில் முனைவர் ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்கள் உயன்யாசம் வழங்கினார். முனைவர் ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியர் அவர்களை சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் ஆகியோர் கெளரவித்தார்கள். உடன் இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தி. தேன்மொழி, திரு ஆ. வெங்கடேசன், திரு பி.ஆர். தேவநாதன், திரு கே.எஸ். முரளி, திரு பி. பரமசிவம் உள்ளிட்டோர்.