ஸ்வாதி ஸ்மிருதி 2022 – 23.04.2022

23.04.2022 சனிக்கிழமை அன்று ரசிகப்பிரியா மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து ”ஸ்வாதி ஸ்மிருதி 2022” இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த விழாவில் ரசிகப்பிரியா அமைப்பு பவள விழா கொண்டாடும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு ”ரசிக சேவா ரத்ன” என்ற விருதினை வழங்கியது.

நிகழ்ச்சியின் முதல் நாள் பாடகி மகதி, வயலின் ஸ்ரீதர் மற்றும் கும்பகோணம் என். பத்மநாபன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் தகவல் ஒலிப்பரப்புத் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு சதீஸ் நம்பூதிரி பாட் அவர்கள் கலந்து கொண்டார். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (பணிநிறைவு), இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு எஸ். சுவாமிநாதன், திரு பி.ஆர். தேவநாதன், திரு ரா. கணேஷ் திருமதி தேன்மொழி முத்துக்குமார், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மற்றும் கலைஞர்களை ரசிகப்பிரியா அமைப்பின் தலைவர் டாக்டர் டி.வி. மணிகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் திரு ஆர். ராமநாதன் ஆகியோர் கெளரவித்தனர்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா மற்றும் செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.