03.09.2022 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தில்லி திரு ஆர். ஸ்ரீதர் அவர்களின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் என். பத்மநாபன் மிருதங்கமும், மன்னை திரு என். கண்ணன் கடமும், பிஜங்கி திரு வி. ரவிகிரண் மோர்சிங்கும், தாளத்தில் செல்வி வைஷ்ணவி பக்கவாத்தியங்களாக வாசித்தனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், முன்னாள் தலைவர் திருமதி இந்துபாலா, முன்னாள் பொருளாளர் திரு எம். சத்தியமூர்த்தி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு எஸ். அருணாசலம் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தனர்.
சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.