07.10.2023 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருச்சி திருமதி ரும்மிணி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரு ராகவேந்திர பிரசாத் வயிலினும், திரு பி. வெற்றிபூபதி மிருதங்கமும், திரு வருண் ராஜசேகர் கடமும் வாசித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் விவேகா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திரு ஜெ. சுந்தரேசன் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தார்கள்.