11.09.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 101 வது நினைவு நாளில் பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் செயல் தலைவர் திரு இரா. முகுந்தன், சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு எஸ். அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.